விருதுநகர்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

DIN

விருதுநகர் அருகே சின்னவாடியில் உள்ள கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் உராய்வு காரணமாக செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில், அறை ஒன்று முற்றிலும் சேதமடைந்தது.
     சிவகாசியை சேர்ந்த கனகவேல் மகன் ஜெய்சங்கர் என்பவர், சின்னவாடி கிராமத்தில் கார்னேசன் பேப்பர் கேப் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். 
இந்த ஆலையில், கேப் வெடி தயாரிக்கும் பணியில் சுமார் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேப் வெடியை ஒரு அறையில் காய வைத்துவிட்டு தொழிலாளர்கள் சென்றுவிட்டனர். பின்னர், உராய்வு காரணமாக பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறியதில், அந்த அறையின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் முற்றிலும் சேதமடைந்தன.
    தகவலின்பேரில், சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்து, சுமார் அரை மணி நேரம் போராடி அணைத்தனர்.
    இது குறித்து வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT