விருதுநகர்

சாத்தூர் வட்டாட்சியர்  அலுவலக ஊழியர்களுக்கு கண் பரிசோதனை

DIN

சாத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 சிவகாசி தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமை சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் சாந்தி தொடக்கி வைத்தார். 
சாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.  அவர்களுக்கு மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்து கண்ணில் குறை உள்ளவர்களுக்கு கண்ணாடி அணிவது குறித்தும், கண்களை பாதுகாத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். முகாமில் துணை வட்டாட்சியர் சுந்தரபாரதி மற்றும் மண்டல துணை வட்டாசியர் ராஜாமணி உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT