விருதுநகர்

சாத்தூர் அருகே ரூ.60 ஆயிரம் பறிமுதல்

சாத்தூர் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல்  செய்தனர்.

DIN

சாத்தூர் அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல்  செய்தனர்.
  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நாரணாபுரம் சந்திப்பில், தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி கலைவாணி தலைமையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ராமகிருஷ்ணன் ரூ.60 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கொண்டு செல்வதாக அவர் கூறினார்.  ஆனால் உரிய ஆவணமில்லததால் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரெங்கநாதனிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT