திருச்சியை சேர்ந்த ஜெயலட்சுமி (40) மற்றும் இவரது உறவினர்களான தங்கராஜ், பவித்ரா (25) ஆகிய மூவரும், கோவில்பட்டி அருகேயுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சாத்தூர் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த இவர்களது காரும், திண்டுக்கல் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அஜீத்குமார், ரெஜினா, ரதி ஆகியோர் சென்ற காரும் ஒன்றையொன்று முந்துவதில் போட்டி ஏற்பட்டதில் மோதி 2 கார்களும் சாலையில் கவிழ்ந்தன. இதில், 2 கார்களிலும் வந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.
சாத்தூர் தாலுகா போலீஸார் காயமடைந்த 6 பேரையும் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.