விருதுநகர்

விருதுநகர்: 1,881 வாக்குச் சாவடிகளில் 4,956 மத்திய படை,போலீஸ் பாதுகாப்பு

DIN

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,881வாக்குச் சாவடிகளில் 4,956 மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
 இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் செவ்வாய்கிழமை கூறியதாவது:  விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
 தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு பொதுத்தேர்தல் மற்றும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 15,89,416 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த 7 தொகுதிகளிலும் 1,881 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 600 பேர், முன்னாள் ராணுவத்தினர் 500 பேர், ஊர்க் காவல் படையினர் 275 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 360 பேர், போலீஸார் 3152 பேர், இதர பாதுகாப்பு வீரர்கள் 69 பேர் என மொத்தம் 4,956 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT