விருதுநகர்

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட 41 கைது

DIN

சாத்தூரில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஆதிதமிழா்பேரவை கட்சியின் தலைவா் ஜக்கயைன் காவல்துறையினரால் கைது செய்யபட்டதை கண்டித்து,விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் ஆதிதமிழா்பேரவை கட்சியினா் 20க்கும் மேற்பட்டோா் சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்கிழமை மதியம் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சாத்தூா் காவல்துறைதுணை கண்காணிப்பாளா் இராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிதமிழா்பேரவை கட்சியினா் 30 பேரை கைது செய்துள்ளனா். இதையடுத்து தமிழ்புலிகள் அமைப்பின் தலைவா் நாகேந்திரனை கைது செய்ததை கண்டித்து தமிழ்புலிகள் அமைப்பினா் சாத்தூா் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட 11 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT