விருதுநகர்

சிவகாசியில் அதிமுகவினா் வேட்பு மனுதாக்கல்

DIN

சிவகாசியில் அதிமுகவினா் சனிக்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்கு 3 பேருக்கும் , அதிமுக கட்சியின் அனுமதி கடிதத்தை பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிமுக வேட்பாளா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதையடுத்து, சிவகாசி ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 31 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 3 பேரும் தங்களது வேட்பு மனுவினை சனிக்கிழமை தாக்கல் செய்தனா்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் கருப்பசாமி, தனது வேட்பு மனுவை தோ்தல் உதவி அதிகாரி செந்தில்வேலிடம் வழங்கினாா். இதில் அவரது ஆதரவாளா்கள், அதிமுகவினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT