முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:  இளைஞர் கைது

சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை மகளிர் காவல்நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 8:24 am IST
பகிர்:

சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை மகளிர் காவல்நிலைய போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே என்.மேட்டுபட்டியை  சேர்ந்த 9 வயது சிறுமி,  மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ராஜமுனியாண்டி(31), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜமுனியாண்டியை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.