பயிர்க்கடன் தள்ளுபடி; நிறைய ஏமாற்றங்களுக்கு தயாராகணுமா சிஎம் சார்? - உதயநிதி ஸ்டாலின்!
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம்; நிறைய ஏமாற்றங்களுக்கு தயாராகணுமா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி.
பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்; நிறைய ஏமாற்றங்களுக்கு தயாராக வேண்டுமா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று (மே 25) அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அந்தப் பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி. ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், ஸ்கேம் (SCAM) செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்கணுமா சிஎம் சார் (CM saar)?” எனக் குறிப்பிட்டுள்ளார்.