விருதுநகர்

சிவகாசியில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

DIN

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை பெண்ணிடம் சங்கிலியை பறிக்க முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி தெய்வானை நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமா (40). இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது, பின்புறமாக வந்த ஒருவர் , ஹேமாவை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். இதையடுத்து அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கம் உள்ளவர்கள் அந்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் அவர், அய்யனார் காலனியைச் சேர்ந்த செல்வராஜன்  மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT