விருதுநகர்

அரசுப் பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சாவு

DIN

விருதுநகர் அருகே  நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
விருதுநகர் அருகே உள்ள சின்ன மருளூத்து கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (52). இவர், இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் உள்ள பெரிய மருளூத்து அருகே சென்ற போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இது குறித்து பெரிய மருளூத்து கிராம நிர்வாக அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில், அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் வடிவேல் (40) மீது சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 31 லட்சம் நிலம் மோசடி: 2 பேர் கைது

இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்புக்கு உத்தரவிடக் கூறுவது சரியான அறிவுரையல்ல

கடமையைக் கைகழுவும் அரசு!

முதியவருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

SCROLL FOR NEXT