விருதுநகர்

அருப்புக்கோட்டை கல்லூரியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மலரஞ்சலி

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக  உறுப்புக் கலைக் கல்லூரி சார்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு திங்கள்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் அழகுச்செல்வம் முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாணவிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் 3 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். இதில் பேராசிரியர்கள் ஞானேஸ்வரன், தனசேகர், ராஜமோகன், உடற்கல்வி ஆசிரியர் பூபதிராஜன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT