விருதுநகர்

மகளிர் சுய உதவிக்குழுவினர் பொருள்கள் கண்காட்சி

DIN


சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்துள்ள பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சனிக்கிழமை தொடங்கியது.
விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவுக்கு திட்ட இயக்குநர் ஆர்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். தாளாளர் ஆர்.சோலைச்சாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர்  சணலில் தயாரிக்கப்பட்ட கைப்பைகள், ஆயத்த ஆடைகள், பொம்மை, மண்பாண்டங்கள், பெண்கள் கழுத்தில் அணியும் அணிகலன்கள், ஊறுகாய், கடலை உருண்டை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் பால்ராஜ், விற்பனை மேலாளர் கிறிஸ்டோபர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டு பொருள்களை வாங்கிச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT