விருதுநகர்

சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

சிவகாசியில் உள்ள ஷீல்டு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
     சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலிருந்து ரயில் நிலையம் செல்லும் ஷீல்டு சாலையில், அரசு மருத்துவமனையின் நுழைவுவாயிலருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகருக்கு இச்சாலை வழியே செல்கின்றன. இந்நிலையில், இச்சாலையில் பள்ளம் உள்ளதால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
    இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் போதிய மின்விளக்கு இல்லாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். 
     எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையிலுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT