விருதுநகர்

மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி சிவகாசி பள்ளி முதலிடம்

DIN


சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனித்திறன் போட்டியில் சிவகாசி பள்ளி முதலிடம் பெற்றது.
பள்ளி மாணவர்களின் ஆராய்ச்சித்திறன், தனித்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் உள்ள 32 பள்ளிகளைச் சேர்ந்த 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 1,328 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாதிரிவடிவமைப்பு, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி-வினா , ஓவியப்போட்டி ,வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் அதிகப்புள்ளிகள் பெற்று சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. இலஞ்சி பாரத்வித்யா மந்திர் இரண்டாமிடம் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சக்திவேல், டபிள்யூ. வின்பிரடே சசிகாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT