விருதுநகர்

விருதுநகரில் ரயில்வே ஓய்வூதியர் சங்க மாநாடு

DIN


விருதுநகரில் ரயில்வே ஓய்வூதியர் சங்க 8-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே மேலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில், மத்திய ரயில்வே ஓய்வூதியர் சங்க இணை பொது செயலாளர் எஸ்.பி. சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட 3 சதவீதத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதந்தோறும் மருத்துவப் படி ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ரயில்வே சார்பில் அலுவலகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முடிவில், விருதுநகர் கிளை துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT