விருதுநகர்

சிவகாசி மகளிர் கல்லூரியில் பயிற்சி முகாம்

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இக்கல்லூரியில், தொழில்சார் கல்வி நிலையங்களில் பின்பற்றப்படும் பயன்சார் கல்வி இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கல்லூரி பேராசிரியர்களுக்கு பயன்சார் கல்வி குறித்துபயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். 
அக்கல்லூரி கணிதத்துறை பேராசிரியர் க.சத்யா, பயிற்சி அளித்து பேசியதாவது: வகுப்பறையில் பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு, மாணவிகளை வேலைவாய்ப்புக்கு தயார் செய்ய வேண்டும். மாணவிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, அவர்களை தொழில் வல்லுநர்களாக்க வேண்டும். மாணவிகளை வேலைவாய்ப்புக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுதா பெரியதாய் வரவேற்றார். பேராசிரியர் பா.தீபா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT