விருதுநகர்

சாத்தூர் நூலகத்தில் வாசிப்பு இயக்க போட்டிகள்

DIN

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நூலகத்தில் வாசிப்பு இயக்க போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
  பள்ளி மாணவ, மாணவிகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், நூலகர் திருஞானசம்பந்தம் தலைமை விகித்தார். சாத்தூர் முக்கிய பிரமுகர்களான மெஜஸ்டிக் தியாகராஜன், ஆறுமுகச்சாமி, லட்டு கருப்பசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு, புத்தகம் வாசிப்பது, கதை வாசிப்பது குறித்துப் பேசினர்.  பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் சாத்தூர் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ராதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT