விருதுநகர்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை , சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமினை நடத்தின. 
நிகழ்ச்சிக்கு முதல்வர் (பொறுப்பு) சோ.சுரேஷ் தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட தொழுநோய் பிரிவு இணை இயக்குநர்  யமுனா பேசியது: தொழுநோய்  குணப்படுத்தகூடியதுதான். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வசதி உள்ளது.  உணர்ச்சியற்ற தோல் இருந்தால் அதுவே தொழுநோயின் அறிகுறி. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தி, ஊனத்தை தடுக்கலாம். இதுகுறித்து மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 
திட்ட அலுவலர் பெ.கணேசமுருகன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT