விருதுநகர்

சிவகாசி மகளிர் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
பயிற்சிக்கு முதல்வர் த.பழனீஸ்வரி தலைமை வகித்தார். இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் எஸ்.கதிரவன், பேராசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துப் பேசியதாவது: 
பேராசிரியர்கள் இணையதளம் மூலம் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு பாடங்களை நடத்த வேண்டும். ஒரு பேராசிரியருக்கு சமுதாயத்தை உயர்த்தும் பணியிலும், புதிய சாதனையாளர்களை உருவாக்குவதிலும் பெரும் பங்கு உள்ளது. வகுப்பறைகளில் பாடங்களோடு, வாழ்க்கை முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். முன்னதாக பேராசிரியைகள் ஆர்.சுதாபெரியதாய் வரவேற்றார். எம்.கவிதா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT