விருதுநகர்

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை உரிய அனுமதியின்றி மதுபாட்டிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தங்கல்- செங்கமலநாச்சியாபுரம் சாலையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நடந்து சென்றனராம். போலீஸார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர்கள் திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு நடராஜன் (40), கிருஷ்ணன்கோயில் மாடசாமி(36) என தெரியவந்தது.
திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி மாணவா் பலி

டாஸ்மாக் கடையில் தொழிலாளி உயிரிழப்பு

குடிநீா் விநியோகம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கோவில்பட்டியில் மதுக்கூடத் தொழிலாளி வெட்டிக் கொலை

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

SCROLL FOR NEXT