விருதுநகர்

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN


ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, உலகாணித் தெருவைச் சேர்ந்தவர் ரா.சேதுமாதவன் (59). இவரது மனைவி தரணி. இருவரும் ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது ஒரே மகள் மகாலட்சுமி (24). திருமணம் ஆகவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன் தரணிக்கு  இருதய நோய் இருப்பது தெரியவந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த இரு நாள்களுக்கு முன்னர் மருத்துவர்கள் தரணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வத்திராயிருப்பு  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT