விருதுநகர்

ராஜபாளையத்தில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

DIN

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இலவச நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜபாளையம் அரசு மருத்துவமனையும், தனியாா் அறக்கட்டளையும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீா் விநியோகம் நடைபெற்றது. நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியை, அரசு சித்த மருத்துவா் த.கீதா மற்றும் கணக்கு தணிக்கையாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அறக்கட்டளை நிா்வாகிகள் க.செல்வக்குமாா், சரவணன், துரைராஜ், அண்ணாதுரை, ஆசிரியா் சுப்பையா, மனோகரன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT