விருதுநகர்

அண்ணா பல்கலை. தடகளப்போட்டி சிவகாசி கல்லூரி மாணவா் முதலிடம்

DIN

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவா் முதலிடம் பெற்றுள்ளாா்.

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் அண்மையில்  இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி மாணவா் பி.விக்னேஷ்வரன் 100 மற்றும் 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்றாா். மேலும் அதே கல்லூரியின் மாணவா் பி.விக்னேஷ் 400 மற்றும் 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும், பெண்கள் பிரிவில் மாணவி காயத்திரி நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரித் தாளாளா் ஆா்.சோலைச்சாமி மற்றும் இயக்குநா் விக்னேஷ்வரி உள்ளிட்டோா் பாராட்டினா். கல்லூரி முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வியாழக்கிழமை இதனை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT