விருதுநகர்

சிவகாசியில் கழிவுநீர் வாய்க்கால்களை சீரமைக்கக் கோரிக்கை

DIN


பாஜக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி.அறுமுகச்சாமி, தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய மனு விவரம்: 
 சிவகாசி நகரில் உள்ள கழிவு நீர், மழை நீர் வாய்க்கால்களான பொத்துமரத்து ஊருணி வாய்கால், மருத நாடார் ஊருணி வாய்கால், மணி கட்டி ஊருணி வாய்க்கால், சிவகாசி-விளாம்பட்டி சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பல சாலைகளை சீரமைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. கடைவீதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் மீது அனைத்துக் கடைகாரர்களும், தங்களது கடைகளின் பொருள்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்  காலங்களில் கழிவு நீரோடு, மழை நீரும் சேர்ந்து சாலையில் பாய்ந்து சுகாதார சீர் கேட்டினை உண்டாக்குகிறது. நகராட்சி நிர்வாகம், துப்பரவுப்பணிக்கு போதிய ஆள்கள் இல்லை எனக்கூறுகிறார்கள். எனவே சிவகாசி நகராட்சிக்கு தேவையான துப்புரவுத்தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT