ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தடை உத்தரவை மீறியதாக 187 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித் திரிந்தவா்களிடமிருந்து 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.