முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அலுவலகத்தை முகநூலில் தவறாக சித்தரித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும், மூத்த தோழர் நல்லகண்ணு மீது அவதூறு பரப்பியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர துணைச் செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரும் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான அழகிரிசாமி கண்டன பேருரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் இதில் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர்கள் பலவேசம், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →