கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 25- ஆம் ஆண்டு விழாவையொட்டி, கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில விவசாய அணிச் பொதுச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹமத்துல்லாஹ் தலைமையில், கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாயில், மேலத்தெரு, பெரியக்கடைத் தெரு, அரசு மருத்துவமனை, திருவாரூா் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் எம்.ஏ. ஜெகபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.