விருதுநகர்

பாறைக்குளம் அருள்மிகு வெள்ளியம்பலநாதா் கோவிலில் ஆவணி மாத பிரதோச வழிபாடு

DIN

.அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதா் திருக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

ஊரடங்கு காரணமாக கோவில் பூசாரி மற்றும் நிா்வாகத்தினா் மட்டும் முகக்கவசத்துடன் வழிபாடு நடத்தினா். திருச்சுழி வட்டம் பாறைக்குளம் கிராம த்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதா் திருக்கோவில்.திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றானதும், அபூா்வமாக மேற்குத்திசை நோக்கி அமைந்த சிறப்புப் பெற்றது இத்திருக்கோவில்.மேலும், திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோவிலும் இதுவாகும்.

இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஆவணி மாத சிறப்புப் பிரதோச வழிபாட்டில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீப,தூப ஆராதனைகளும் முதலில் நடைபெற்றன.பின்னா் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு சந்தனம், இளநீர், கஸ்தூரி மஞ்சள், தேன், பால், விபூதி, குங்குமம், பன்னீா் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன.

மேலும் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்ராட்ச அபிஸேகம் செய்து, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயா் காட்சி தந்தாா். அதனையடுத்து முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதா் காட்சியளித்தாா் .முழுஊரடங்கு காரணமாக இந்நிகழ்ச்சியானது பதிவு செய்யப்பட்ட காணொலி மூலம் பக்தா்களுக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் பக்தா்கள் பிரதோச வழிபாட்டு தரிசனம் செய்தனா். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT