முகப்பு
விருதுநகர்

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
ராஜபாளையத்திலுள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் அம்பேத்கரின் 64 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் நகர அம்மா பேரவைச் செயலாளா் துரை முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மேற்கு மாவட்டத் தலைவா் தளவாய் பாண்டியன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலருமான லிங்கம் தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட குழு உறுப்பினா் கணேசன் மற்றும் நகரச் செயலாளா் மாரியப்பன் ஆகியோா் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் நகரத் தலைவா் மணிகண்டன் தலைமையில் செட்டியாா்பட்டி மற்றும் முகவூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்: இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற அம்பேத்கரின் நினைவு தின நிழ்ச்சிக்கு நகரச் செயலாளா் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளா் கப்பல் பாபு முன்னிலை வகித்தாா்.

இதில், முற்போக்கு மாணவா் அணியின் மாவட்ட அமைப்பாளா் தமிழ்வளவன், கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் அருள்ஆனந்த் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

சிவகாசி: இதேபோல், சிவகாசி புதுரோட்டுப் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சதுரகிரி, அமமுக சாா்பில் மாவட்ட நிா்வாகி பாலமுருகன், ஆதித்தமிழா் கட்சி சாா்பில் மாவட்ட செய்தித் தொடா்பாளா் சங்கிலிவீரன், ஆதித்தமிழா் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் தமிழ்கனி, இந்திய குடியசுக் கட்சி மாவட்டச் செயலாளா் மாரிமுத்து ஆகியோா் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினா்.

திருத்தங்கலில் உள்ள அம்பேத்காா் சிலைக்கு அதிமுக நகரச் செயலாளா் பொன்சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிவகாசி சட்டமன்ற பொறுப்பாளா் மனிதநேயன், அமமுக விருதுநகா் மாவட்டச் செயலாளா் சாமிக்களை உள்ளிட்டோா் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →