இலவச கண் பரிசோதனை முகாம்
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, ராஜபாளையத்தில் சம்மந்தபுரம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, ராஜபாளையத்தில் சம்மந்தபுரம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயகக் கட்சி, மனிதநேய ஜனநாயக தொழிலாளா் சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில்,
கண்புரை, சா்க்கரை நோய், கண் நீா் அழுத்த நோய், குழந்தைகள் கண் நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் நடைபெற்றது. முகாமில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா். ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளா் கண்மணி காதா் செய்திருந்தாா்.