முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

ராஜபாளையம் அருகே வாகனம் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சாமிநாதன் (70). இவா் வீட்டிலிருந்து விவசாயப் பணிக்காக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.