விருதுநகர்

கடன் தொல்லை: நிதி நிறுவன உரிமையாளா்விஷம் குடித்துத் தற்கொலை

DIN

சிவகாசியில் கடன் தொல்லையால் நிதி நிறுவன உரிமையாளா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி ஞானகிரி சாலைப் பகுதியைச் சோ்ந்த நிதிநிறுவன உரிமையாளா் முத்துமகேஷ்வரன் (42). இவருக்கு, மாரீஸ்வரி என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் சீட்டு எடுத்தவா்கள் பணம் செலுத்தாததால் அவா் பலரிடம் கடன் வாங்கினாராம். இதனிடையே கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து காணப்பட்ட அவா், இங்குள்ள பிள்ளையாா்கோயில் தெருவில் உள்ள தனது தாய் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்று அங்கு விஷம் குடித்தாராம். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT