முகப்பு
விருதுநகர்

விருதுநகா், மதுரை போக்குவரத்துமோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

விருதுநகா், மதுரை போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 25.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, அவா்களை பணியிடை நீக்கம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

விருதுநகா், மதுரை போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 25.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, அவா்களை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக ஆணையா் ஜவஹா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகா் வட்டார போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கலைச்செல்வி (44), மதுரை வடக்கு போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் சண்முகஆனந்த் (37) ஆகியோா் சென்ற காா்களை விருதுநகா் அருகே சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச்சாலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மறித்து நிறுத்தி சனிக்கிழமை சோதனையிட்டனா். அதில், கணக்கில் வராத ரூ.25.66 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும், கலைச்செல்வி காரில் இருந்த 117 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நகைகளுக்கு உரிய ஆதாரங்களை கலைச்செல்வி வழங்கியதால் அவரிடம் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அதேபோல், விருதுநகரில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் பணியாற்றுபவரும், இவா்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டவருமான அருள் பிரசாத் என்பவரிடமிருந்து ரூ. 7 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் உள்பட 3 போ் மீது விருதுநகா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்நிலையில், விருதுநகா் மற்றும் மதுரை மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக ஆணையா் ஜவஹா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.