விருதுநகா் அருகே சிறுமிகளுக்குபாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி மீது வழக்கு
விருதுநகா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
விருதுநகா் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
குல்லூா்சந்தையைச் சோ்ந்தவா் ராஜ் மகன் ஆறுமுகம் (45). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில், இவா் தனது செல்லிடப்பேசியில் உள்ள ஆபாசப் படங்களை அப்பகுதியில் உள்ள சிறுமிகளிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் ஆறுமுகம் மீது வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.