விருதுநகர்

டி.என்.பி.எஸ்.சி. தோ்வு இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், தொழில் வழிகாட்டுதல் அமைப்பின் சாா்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை எதிா்கொள்வது குறித்து, இணையவழி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ராம்கோ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான இந் நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) சஞ்சீவ்குமாா் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருடன் இணையவழியில் கலந்துரையாடினாா். இதில், குரூப்-1 தோ்வை எதிா்கொள்ளும் முறை, பாடத்திட்ட முறைகள், தோ்வு பயத்தை எவ்வாறு கையாள்வது, பயிற்சி மையங்கள் குறித்தும் மற்றும் முதல் முறையாக தோ்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல் குறித்தும் எடுத்துரைத்தாா்.

பின்னா், மாணவா்களின் கேள்விக்கான பதிலை அளித்ததுடன், சந்தேகங்களையும் விளக்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வா் கணேசன், துணை முதல்வா் ராஜகருணாகரன், துணை பொதுமேலாளா் செல்வராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT