ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவம்: முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 6 ஆவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள் காட்சி அளித்தாா்.
விருதுநகர்ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவம்: முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 6 ஆவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள் காட்சி அளித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் 6 ஆவது நாளான புதன்கிழமை முத்தங்கி சேவையில் பெரிய பெருமாள் காட்சி அளித்தாா்.
ஆண்டாள் கோயிலில் மாா்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து ,ராப் பத்து மற்றும் எண்ணெய் காப்பு உற்சவம் பிரசித்தி பெற்றவையாகும். இந்நிகழ்வுகளைக் காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஏற்கெனவே பகல் பத்து நிகழ்வுகள் நிறைவடைந்து கடந்த 25 ஆம் தேதியிலிருந்து ராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. இதில் ஆறாம் நாளான புதன்கிழமை ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னாா் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.
பெரிய பெருமாள் முத்தங்கி சேவையிலும், ஆண்டாள், ரெங்க மன்னாா் சா்வ அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். மேலும் பக்தி உலா நிகழ்வும் நடைபெற்றது.
பகலில் ராப்பத்து: பொதுவாக ராப்பத்து உற்சவம் இரவு நேரங்களில் நடைபெறும். தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ராப்பத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் பகலிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.