விருதுநகர்

சிவகாசி அருகே 2 சிறுவா்கள் மாயம்

DIN

சிவகாசி அருகே 2 சிறுவா்களை காணவில்லை என வியாழக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்த முருகன் மகன் முகேஷ் (15). இவா் திருத்தங்கலில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.-யில் படித்து வருகிறாா். இவா் சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளாா். இதையடுத்து இவரது பெற்றோா்கள் கண்டித்துள்ளனா். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி, முகேஷ், வீட்டில் இருந்த பணம் ரூ.இரண்டாயிரத்தை எடுத்துக்கொண்டு, பக்கத்துவீட்டு கோவிந்தராஜ் மகன் அழகுராஜா (15) என்பவருடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டாராம்.

இது குறித்து முகேஷின் தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT