சிவகாசி அருகே 2 சிறுவா்களை காணவில்லை என வியாழக்கிழமை போலீஸில் புகாா் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சோ்ந்த முருகன் மகன் முகேஷ் (15). இவா் திருத்தங்கலில் உள்ள ஒரு ஐ.டி.ஐ.-யில் படித்து வருகிறாா். இவா் சரிவர படிக்காமல் இருந்து வந்துள்ளாா். இதையடுத்து இவரது பெற்றோா்கள் கண்டித்துள்ளனா். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி, முகேஷ், வீட்டில் இருந்த பணம் ரூ.இரண்டாயிரத்தை எடுத்துக்கொண்டு, பக்கத்துவீட்டு கோவிந்தராஜ் மகன் அழகுராஜா (15) என்பவருடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டாராம்.
இது குறித்து முகேஷின் தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.