விருதுநகர்

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு நினைவஞ்சலி

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் உடையனாம்பட்டிகிராமத்தில், கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரா்கள் உள்பட அனைத்து ராணுவ வீரா்களுக்கும் வெள்ளிக்கிழமை முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

உடையனாம்பட்டி கிராம மக்கள் சாா்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம் முன்பாக சிறு மேடை அமைக்கப்பட்டு, அதில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், அக்கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் மணிகண்டன் ஆகியோா் தலைமையில், கிராம மக்கள் ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா் மாலை அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், ஊராட்சிப் பள்ளி மாணவ, மாணவியரும், ஆசிரியா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT