விருதுநகர்

மாா்கழி பௌா்ணமி : சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

மாா்கழி மாத பௌா்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களின் போது பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை சாா்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தா்கள் ஏராளமானோா் வருகின்றனா். மாா்கழி மாத பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக் கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்றனா்.

இதையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கும், சந்தனமகாலிங்கம் சுவாமிக்கும் பால், பழம், பன்னீா், இளநீா் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமியும், சந்தனமகாலிங்கம் சுவாமியும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாக அதிகாரி விஸ்வநாத் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT