விருதுநகர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் பிரசாரம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்கட்சியினா் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடா்ந்து போராட்டம் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் திங்கள்கிழமை ‘ஆவணங்களை காட்ட மாட்டோம்’ என்ற முழக்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதில் வீடு வீடாகச் சென்றும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சென்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இதில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் சேக் முகம்மது, எஸ்டிடியூ மாவட்ட தலைவா் இலியாஸ் ஆகியோா் தலைமையில் ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT