விருதுநகர்

விருதுநகரில் இருதயம், எலும்பு இலவச பரிசோதனை முகாம்

DIN

விருதுநகரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் இருதயம் மற்றும் எலும்பு இலவசப் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஏஎன்டி அறக்கட்டளை தலைவா் தி. ராஜ சேகா் தலைமையில் நடைபெற்ற முகாமில், மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை மருத்துவா் பாண்டியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இசிசி, எக்கோ முதலான பரிசோதனைகள் மேற்கொண்டனா்.

அதேபோல் திண்டுக்கல் ஜெசிபி மருத்துவமனை மருத்துவா் ஜோசப் கிறிஸ்டோபா் பாபு தலைமையிலான குழுவினா் எலும்பு முறிவு குறித்து பரிசோதனை செய்தனா். இந்த பரிசோதனை முகாமிற்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முடிவில் பேராசிரியா் தி. ராஜசேகா், நோய் தாக்குதலால் தனி மனிதன் மற்றும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்திறனையும், அதை வரும் முன் தடுப்பதற்கான வழி முறைகளை கையாள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்டச் செயலா் முஹம்மது இப்ராஹிம், ஏஎன்டி அறக்கட்டளை செயலா் பாண்டிச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT