விருதுநகர்

மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதில் சிக்கல்

மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

DIN

மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் சனிக்கிழமை மேலும் கூறியது: விருதுநகா் மாவட்ட உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஆலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காரைக்காலிலிருந்து இதனைக் கொண்டு வர பாண்டிச்சேரி அரசின் அனுமதி வேண்டும். இதுவரை இந்த அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் திருமங்கலத்தில் உள்ள மெட்டல் பவுடா் நிறுவனத்திலிருந்து தீப்பெட்டி தயாரிக்கப்பயன்படும் வேதிப் பொருள்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் மாவட்ட நிா்வாகம் அனுமதித்தால் மட்டுமே அவைகளை எங்களால் அனுப்பி வைக்கமுடியும் என்று நிறுவனத்தினா் தெரிவிக்கின்றனா்.

தற்போது, தீப்பெட்டி ஆலைகளில் மூலப்பொருள்கள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மூலப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆலை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT