விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 100 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி

DIN

சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 100 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனோ வைரஸ் பரவலை தடுக்க பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து மாா்ச் 24 ஆம் தேதி முதல் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பட்டாசுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் நிபந்தனைகளுடன் பட்டாசு ஆலைகளைத்

திறக்கலாம் என அறிவித்தது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளா்கள், தங்களது ஆலைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்தனா். இந்த விண்ணப்பங்களை சிவகாசி தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியா் சீனிவாசன் பரிசீலனை செய்து, மே 6 ஆம் தேதி 240 பட்டாசு ஆலைகள், மே 7 ஆம் தேதி 410 பட்டாசு ஆலைகள் என 650 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கினாா்.

தற்போது மேலும் 10 0 ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை மொத்தம் 750 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தனி வட்டாட்சியா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT