முகப்பு
விருதுநகர்

தமுஎகச சார்பில் நூல் அறிமுகம் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பில் வெளிவந்த இரண்டு நூல்களின் அறிமுக விழா மற்றும் அமைப்பினுடைய கலைஞர்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலயா பள்ளியில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
தமுஎகச சார்பில் நடந்த நூல் அறிமுகம் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு விழா.
பகிர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பில் வெளிவந்த இரண்டு நூல்களின் அறிமுக விழா மற்றும் அமைப்பினுடைய கலைஞர்களுக்கு பாராட்டு விழா மகாத்மா வித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கிளைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் லட்சுமிகாந்தன் விழாவினை துவக்கி வைத்தார். எழுத்தாளர் உமர் பாருக் எழுதிய அதுர சாலை என்ற நாவலை எழுத்தாளரும் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான மணிமாறன் அறிமுகம் செய்தார். கரீம் எழுதிய இருண்ட கால கதைகள என்ற நூலை எழுத்தாளர் சங்கத்தினுடைய மாநில கௌரவ தலைவருமான தமிழ்செல்வன் அறிமுகம் செய்தார். 

தொடர்ந்து அமைப்பினுடைய கலைஞர்கள் பாராட்டப்பட்டனர். கலைஞர்கள் சார்பில் மரிய டேவிட் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில் எழுத்தாளர் கனராம புத்திரன் கவிஞர் இளங்கோவன் மற்றும் சண்முகம் நந்தன் கனகராஜ் மக்கள் மருத்துவர் பால்சாமி அறிவொளி முருகன் கருப்பையா உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலாளர் நித்தியானந்தம் ஏற்பாடு செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →