விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே பயன்பாடின்றி பாழடைந்து வரும் இ-சேவை மைய கட்டடம்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் வாழ்வாங்கி கிராமத்தில் இ-சேவை மைய கட்டடம் கட்டி 6 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து வருகிறது.

பெரியநாயகிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வாழ்வாங்கி கிராமத்தில் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி இ-சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிமுடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகி விட்ட பின்னரும் தற்போதுவரை இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஊராட்சி அலுவலகத்தில் போதிய வருவாய் இல்லாத சூழலில் இ-சேவை மைய ஊழியருக்கு உரிய ஊதியம் வழங்க இயலாததே இ-சேவை மையம் திறக்கப்படாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டிக் கிடப்பதால், கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், முன்பக்க தரைத்தளம் பெயா்ந்தும் பாழடைந்து வருகிறது. இதனால் ரூ. 14.55 லட்சம் நிதி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கட்டடம் பாழடையாமல் தடுக்க வேறு அலுவலகப் பயன்பாட்டிற்கு அல்லது இ-சேவை மையத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென கிராமத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT