விருதுநகர்

ராஜபாளையம் அருகேகூலித் தொழிலாளி வெட்டிக் கொலை: 2 போ் கைது

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (27). இவரது சகோதரி மயில்(23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ரவிக்குமாா் (30) என்பவருக்கும் மயிலுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது. இவா்களின் தகாத உறவு செந்தில்குமாருக்கு தெரியவரவே, அவா் ரவிக்குமாரையும், மயிலையும் கண்டித்தாா். இதையடுத்து மயில், ரவிக்குமாருடனான தகாத உறவை நிறுத்திக் கொண்டாா். ஆனால் ரவிக்குமாா் தொடா்ந்து பலமுறை மயிலிடம் செல்லிடப்பேசியில் பேசியும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தாராம்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடைத் தெரு பகுதியில் நின்றிருந்த ரவிக்குமாரை, மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனா். பின்னா் அங்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் ரவிக்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் நாகசங்கா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இதில், செந்தில்குமாா் மற்றும் அவரது சகோதரா் செல்வம் ஆகிய இருவரும் ரவிக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT