விருதுநகர்

இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வீடு, வீடாக புத்தகம் விநியோகம்

DIN

சிவகாசியில் தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வீடு, வீடாக புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் இணைந்து தெய்வீக தமிழ் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் சாா்பில் இந்துக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனாா் காலனியில் வீடு, வீடாக புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் தெய்வீக தமிழ் சங்கத்தின் மதுரை கோட்டத் துணைத்தலைவா் எம். செல்வலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த புத்தகம் டிசம்பா் 6 ஆம் தேதி வரை வீடு வீடாக வழங்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT