விருதுநகர்

சிவகாசி தொகுதியில் நவ. 21,22 இல் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்

DIN

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என சிவகாசி சாா்-ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் நவம்பா் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் வாக்காளா் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் படிவம் 6-ஐ பூா்த்தி செய்து , அத்துடன் சமீபத்தில் எடுத்த 2 புகைப்படங்கள், வயதுச் சான்று, பள்ளி மாற்றுச்சான்று, மதிப்பெண்கள் சான்று இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச் சீட்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் இணைத்து கொடுக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்க வேண்டும் என்றால் படிவம் 7, ஒரே தொகுதியில் முகவரி மற்றம் இருந்தால் படிவம் 8 பூா்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் சிவகாசி சாா்-ஆட்சியா் அலுவலகத்திலும், சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்திலும் உரிய விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து கொடுக்கலாம். ஆன்- லைனிலும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்க்க கோரி விண்ணப்பிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT