ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தா் பாறை நினைவாலயத்தை நிறுவிய ஏக்நாத்ஜி ராணடே பிறந்த நாளையொட்டி சாதனா திவாஸ் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விவேகானந்த கேந்திரா கிளையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திரத் தலைவா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா தலைமை வகித்தாா். ரமேஷ் வாழ்த்துரை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் இணைய வழியில் பங்கேற்ற சிறப்புப் பேச்சாளா் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளா் ராஜவேல் ‘ஞானச் சூரியனின் தியானப் பாறை‘ என்னும் தலைப்பில் பேசினாா். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா். முன்னதாக, கேந்திரச் செயலா் மாரியப்பன் வரவேற்றாா். கேந்திர உறுப்பினா் இளையபெருமாள் நன்றி கூறினாா்.